கடல் முள்ளெலி (ஆங்கிலம்: Sea urchin)[1][2] என்பது சிறிய, கூர்மையான முட்கள் கொண்ட, கோளவடிவமுள்ள ஒரு கடல்வாழ் விலங்கினமாகும். இது தமிழில் கடல் மூரை, கடல் ஊமத்தை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 'கடல் குக்கீகள்' (sand dollars) போன்று தங்களுடைய நெருங்கிய உறவினர்களோடு ஒட்டி கொண்டு வாழக்கூடிய இவைகள், முட்தோலித் தொகுதிக்குள் உள்ள 'எசினோய்டியா' (Echinoidea) வரிசையை சார்ந்தவையாகும்.[3] இவற்றின் உடலில் உள்ள முட்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும் கடற்கரை சிற்றூர்களைச் சேர்ந்த சிறுவர்கள் இதை பலகைகளில் எழுதப்பயன்படுத்துவர்.[4]
கடல் முள்ளெலி (ஆங்கிலம்: Sea urchin) என்பது சிறிய, கூர்மையான முட்கள் கொண்ட, கோளவடிவமுள்ள ஒரு கடல்வாழ் விலங்கினமாகும். இது தமிழில் கடல் மூரை, கடல் ஊமத்தை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 'கடல் குக்கீகள்' (sand dollars) போன்று தங்களுடைய நெருங்கிய உறவினர்களோடு ஒட்டி கொண்டு வாழக்கூடிய இவைகள், முட்தோலித் தொகுதிக்குள் உள்ள 'எசினோய்டியா' (Echinoidea) வரிசையை சார்ந்தவையாகும். இவற்றின் உடலில் உள்ள முட்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும் கடற்கரை சிற்றூர்களைச் சேர்ந்த சிறுவர்கள் இதை பலகைகளில் எழுதப்பயன்படுத்துவர்.